டொரன்டோ பேருந்துகளில் கட்டணச் சோதனை!

அபராதம் விதிக்கவும் ஏற்பாடு!

டொராண்டோ போக்குவரத்து ஆணையம் (TTC) கட்டணப் சோதனைத் திட்டத்தை விரிவுபத்தியுள்ளது.

இன்றுமுதல் TTC பேருந்துகளில் பயணிக்கிறவர்கள் Proof of Paymentஐக் காண்பிக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கட்டம் சரியாக பதிவாகவில்லை என்றால் உடனடியாக கட்டணம் செலுத்த வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணச் சான்றை காண்பிக்க தவறினால், பயணிகள் $235 முதல் $425 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் TTC அறிவித்துள்ளது.

குழந்தைகள் அட்டையை பெரியோர் பயன்படுத்தினால் $400 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண ஏய்ப்பினால் ஆண்டுக்கு $140 மில்லியன் இழப்பு ஏற்படுவதாக TTC அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles