றொரண்டோ (Toronto) சிறைச்சாலை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த லூதர் பிப்பி (Luther Pippy) என்ற 80 வயது முதியவர், அவரது அறைத்தோழனால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த சம்பவம் கனடாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
றொரண்டோ சமூக வீட்டுவசதி வளாகத்தில் (Toronto Community Housing Complex) பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி, கடந்த பிப்ரவரி மாதம் எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் வைத்து லூதர் பிப்பி கைது செய்யப்பட்டார்.
மனநலம் பாதிக்கப்பட்டவரான இவர், றொரண்டோ சவுத் தடுப்புக்காவல் மையத்தில் (Toronto South Detention Centre) உள்ள சிறப்புத் தேவைகள் பிரிவில், டக்ளட்ஸ் டெஸ்ட்ருசியன்ஸ்-டுமெஸ்னில்ஸ் (Douglats Destruzions-Dumesnils) என்ற 50 வயது நபருடன் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஏப்ரல் 12 அன்று, அறைத்தோழனான டெஸ்ட்ருசியன்ஸ் கொடூரமான முறையில் முதியவரைத் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் முதியவர் லூதர் பிப்பி தனது பார்வையை இழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது குற்றவாளி மனநல மருத்துவமனை ஒன்றில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து ஒன்டாரியோ என்.டி.பி (Ontario NDP) நீதிக்கான விமர்சகர் கிறிஸ்டின் வாங்-டாம் (Kristyn Wong-Tam), கவலை தெரிவித்துள்ளார்.
சிறைகளில் உள்ள கடுமையான மனநல நோயாளிகளுக்கு முறையான மருத்துவப் பாதுகாப்பு வழங்க ஒன்டாரியோ அரசு தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் இது குறித்து ஒன்டாரியோவின் தலைமை வழக்கறிஞர் அமைச்சகம் (Ministry of the Solicitor General) தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
