றொரண்டோ மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் (GTA) கடந்த சில நாட்களாக நிலவி வந்த இதமான கோடைகால வெப்பம் திடீரென முடிவுக்கு வரவுள்ளது.
இந்த வாரம் முழுவதும் நீடித்த வெப்பமான காலநிலை மாறி, ஞாயிற்றுக்கிழமை முதல் வெப்பநிலை மிகக் கடுமையாகக் குறைய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் 18°C வரை இதமான வெப்பநிலை நிலவும்.
ஆனால், சனிக்கிழமை மாலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை பகல் வெப்பநிலை வெறும் 7°C ஆகவும், இரவு –2°C ஆகவும் சரியும்.
திங்கட்கிழமை வெப்பநிலை இன்னும் குறைந்து, வெறும் 5°C ஆக இருக்கும்.
ஏப்ரல் மாதத்தின் இந்த காலகட்டத்தில் இயல்பாக இருக்க வேண்டிய 12-13°C வெப்பநிலையை விட, இது சுமார் 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாக ஏப்ரல் மாதம் றொரண்டோவில் இதமான வெப்பநிலையே நிலவி வந்த நிலையில், இந்த திடீர் குளிர்கால மாற்றம் பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்த வாரம் முழுவதும் இதே குளிர்ச்சியான நிலையே நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
