றொரண்டோவில் சோகம் – வாகனத்திற்குள் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு!

றொரண்டோவின் (Toronto) கிழக்கு பகுதியில் வாகனமொன்றின் பின் இருக்கையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

திங்கட்கிழமை அன்று குயின் வீதி கிழக்கு (Queen Street East) மற்றும் பேப் அவென்யூ (Pape Avenue) சந்திப்புப் பகுதியில், வாகனத்திற்குள் குழந்தை ஒன்று அசைவற்ற நிலையில் இருப்பதாக அவசர அழைப்பு கிடைத்துள்ளது.​

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மருத்துவக் குழுவினர், குழந்தையை மீட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

இந்தச் சோகமான சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் ஸ்காட் பிராட்பரி (Scott Bradbury) தெரிவித்துள்ளார்.

குழந்தையின் பெற்றோர்கள் தற்போது மருத்துவமனையில் உள்ளனர்.

இந்த உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் மற்றும் மேலதிக விபரங்களை தற்போதைக்கு வெளியிட முடியாது என டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Related Articles

Latest Articles