ஒன்ராறியோவில் போதைப்பொருள் பாவனையைக் கண்காணிக்கும் மேற்பார்வை மையங்களுக்கான (Supervised Consumption Sites) மாகாண நிதியை எதிர்வரும் ஜூன் 13 முதல் நிறுத்தப்போவதாக Doug Ford தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.
இந்த முடிவானது ‘கோழைத்தனமானது’ என்றும், இது போதைப்பொருள் மிகைப்பயன்பாட்டால் (Overdose) ஏற்படும் உயிரிழப்புகளை அதிகரிக்கும் என்றும் சுகாதார ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
டொராண்டோவில் உள்ள Fred Victor Centre மற்றும் South Riverdale Community Health Centre உட்பட ஒட்டாவா (Ottawa), லண்டன் (London), கிங்ஸ்டன் (Kingston) ஆகிய நகரங்களில் உள்ள மையங்களும் இந்த முடிவால் பாதிக்கப்படும்.
போதைப்பொருள் தடுப்புக்குப் பதிலாக, அதற்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் ‘HART Hubs’ எனப்படும் புதிய சிகிச்சை மாதிரியில் முதலீடு செய்யப்போவதாக அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த புதிய திட்டங்கள் இன்னும் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வராத நிலையில், ஏற்கனவே உள்ள உயிர் காக்கும் மையங்களை மூடுவது ஆபத்தானது என Toronto Overdose Prevention Society கவலை வெளியிட்டுள்ளது.
இதனால் வீதிகளில் போதைப்பொருள் பாவனையும் மரணங்களும் அதிகரிக்கக்கூடும் என சிவில் உரிமை அமைப்புகள் மாகாண அரசைக் கடுமையாகச் சாடியுள்ளன.










