கனடாவின் Toronto பகுதிக்கு மேற்கே 1.7 மில்லியன் மக்கள் வாழும் Peel Region இல் (Mississauga மற்றும் Brampton நகரங்கள்), 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளன.
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 58 ஆக இருந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், 2026 ஆம் ஆண்டின் இதே காலத்தில் 103 ஆக உயர்ந்துள்ளதாக Peel Regional Police தரவுகள் தெரிவிக்கின்றன.
பணம் பறித்தல் (extortions), ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் (organized crime) மற்றும் சர்வதேச போதைப்பொருள் வர்த்தகமே இந்த அதிகரிப்பிற்கு முக்கியக் காரணம் என Peel Region இன் பிரதிப் பொலிஸ் அதிபர் Nick Milinovich தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்படும் ஆயுதங்களைக் கைப்பற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து வாகனங்களைத் திருடும் ‘Home invasions’ சம்பவங்களால் மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பிரபல ரியல் எஸ்டேட் தரகர் Sam McDadi, குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த ஒட்டாவாவில் உள்ள சட்டமியற்றுபவர்கள் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
