கடந்த பத்து ஆண்டுகளில் கனடாவில் பிளாஸ்மா (Plasma) தானம் செய்த நால்வர் உயிரிழந்துள்ளன.
இதில், மூன்று மரணங்கள் Manitoba மாகாணத்தில் நிகழ்ந்துள்ளதாக Health Canada அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் மாத்திரம் Winnipeg நகரில் உள்ள Grifols பிளாஸ்மா தான மையங்களில் இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இதில் 22 வயதான Rodiyat Alabede என்ற இளம் பெண் தானம் செய்யச் சென்றபோது இதயத் துடிப்பு நின்று உயிரிழந்தார். மற்றொரு மரணம் Quebec மாகாணத்தில் பதிவாகியுள்ளது.
பிளாஸ்மா தானம் செய்வதால் உயிரிழப்புகள் ஏற்படுவது மிகவும் அரிதானது என மருத்துவர் Ryan Zarychanski தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பிளாஸ்மா தானம் செய்வதற்கு இடையே குறைந்தது 48 மணிநேர இடைவெளி இருக்க வேண்டும் என்ற புதிய விதியை Grifols நிறுவனம் மார்ச் 9 முதல் அமல்படுத்தியுள்ளது.
தற்போது இந்த மரணங்களுக்கும் பிளாஸ்மா தானத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளதா என்பது குறித்து Health Canada ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.










