வாழ்நாள் முழுவதும் துப்பாக்கி வைத்திருக்கத் தடை விதிக்கப்பட்ட 24 வயதுடைய பிராம்ப்டன் (Brampton) இளைஞர் ஒருவர், மிசிசாகா (Mississauga) பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
டொர்பிராம் (Torbram) வீதி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய அந்த இளைஞரை பொலிஸார் மறித்தபோது, அவர் தப்பியோடி பொலிஸாரை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். எனினும், அதிர்ஷ்டவசமாக பொலிஸ் அதிகாரி காயமின்றி தப்பினார்.
மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு, ஐசையா பச்சூ (Isaiah Bachoo) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கைது நடவடிக்கையின் போது ஏற்பட்ட காயங்களுக்கு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இச்சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.
ஏற்கனவே பல நீதிமன்ற துப்பாக்கித் தடைகளைத் மீறியுள்ள இவர் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தியது மற்றும் தடைசெய்யப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மேலும் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர பொலிஸார் ஆலோசித்து வருகின்றனர்.










