நைஜீரியாவிலிருந்து (Nigeria) வந்த பயணி ஒருவரின் பொதிகளிலிருந்து 40 கிலோகிராம் மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சியை கனடா எல்லைச் சேவைகள் முகமை (CBSA) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
றொரண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த மார்ச் 27 ஆம் திகதி முன்னறிவிப்பின்றி கொண்டுவரப்பட்ட இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகளால் பயிற்றுவிக்கப்பட்ட மோபி (Moby) என்ற மோப்ப நாய் இறைச்சி மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தமை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோதமாக இறைச்சியைக் கொண்டு வந்த பயணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பொருட்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன.
கனடாவிற்குள் வரும் பயணிகள் தங்களது வசம் உள்ள அனைத்து உணவு, தாவரம் மற்றும் விலங்கு சார்ந்த பொருட்களைச் சட்டப்படி அறிவிக்க (Declare) வேண்டும் என CBSA மீண்டும் நினைவுறுத்தியுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், கடந்த ஒரு மாதத்திற்குள் பியர்சன் விமான நிலையத்தில் பதிவாகும் இரண்டாவது பெரிய இறைச்சி பறிமுதல் இதுவாகும்.
முன்னதாக மார்ச் 8 ஆம் திகதி, தர்லா (Dharla) என்ற மற்றொரு மோப்ப நாய், எகிப்திலிருந்து வந்த பயணியிடமிருந்து 22 கிலோகிராம் இறைச்சியைக் (வாத்து, புறா, முயல்) கண்டுபிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










