கனடா தபால் சேவை மாற்றம் – வீட்டுக்கு வீடு தபால் விநியோகம் விரைவில் நிறுத்தம்!

கனடா தபால் சேவை, நிதி நிலைத்தன்மையை மேம்படுத்தவும் சேவையைத் திறம்பட வழங்கவும், வீட்டுக்கு வீடு தபால் வழங்கும் முறையை அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக மாற்றியமைக்க உள்ளது.

நான்கு மில்லியன் முகவரிகளுக்கு இந்த மாற்றம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் 2026-ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்குகிறது.

முதற்கட்டமாக, கனடா முழுவதும் சுமார் 136,000 முகவரிகள் இதன்கீழ் கொண்டுவரப்படுகின்றன.

டொராண்டோவின் எட்டோபி கோக் (Etobicoke) பகுதியில் உள்ள 18,000 முகவரிகள் (முக்கியமாக M9V, M9W அஞ்சல் குறியீடுகள் கொண்ட பகுதிகள்) மற்றும் ஒட்டாவாவின் (Ottawa) 30,000 முகவரிகள் (K1B, K1G, K1H, K1J, K1K குறியீடுகள்) முதற்கட்டமாகப் பாதிக்கப்படும்.

கடிதங்கள் மற்றும் சிறிய பொதிகள் பொதுவான தபால் பெட்டிகளில் வைக்கப்படும். பெரிய பொதிகள் அல்லது கையொப்பம் தேவைப்படும் பொதிகள் வழக்கம்போல வீட்டு வாசலுக்கோ அல்லது அருகிலுள்ள தபால் நிலையத்திற்கோ விநியோகிக்கப்படும்.

இந்த மாற்றங்கள் குறித்து அந்தந்தப் பகுதி குடியிருப்பாளர்களுக்கு முன்னரே அறிவிக்கப்படும் என்றும், பொதுவான தபால் பெட்டிகளை நிறுவுவதற்கு முன்னதாகத் தகுந்த இடங்கள் தேர்வு செய்யப்படும் என்றும் தபால் சேவை நிறுவனம் உறுதியளித்துள்ளது.

Related Articles

Latest Articles