மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் மற்றும் உலகளாவிய எரிபொருள் விநியோகத் தட்டுப்பாடு காரணமாக, கனடா முழுவதும் பெற்றோல் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது.
கனடா முழுவதும் ஒரு லீற்றர் சாதாரண பெற்றோலின் சராசரி விலை $1.98 ஆக உயர்ந்துள்ளது.
மொன்றியலில் (Montreal) $2.04, ரொறன்ரோவில் (Toronto) $1.94 மற்றும் வான்கூவரில் (Vancouver) அதிகபட்சமாக $2.23 வரையும் பதிவாகியுள்ளது.
பெப்ரவரி 28 அன்று ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டதும், சவூதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகளின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களுமே இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணங்களாகும்.
எரிசக்தி நெருக்கடி இந்த ஆண்டு முழுவதும் நீடிக்கும் என்றும், உடைந்த விநியோகச் சங்கிலியைச் சீரமைக்க மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட ஆகலாம் என நிபுணர் டான் மெக்டேக் (Dan McTeague) எச்சரிக்கிறார்.
எரிபொருள் விலை உயர்வால் மக்கள் தங்களின் கோடைக்கால பயணத் திட்டங்களைக் குறைத்து வருவதுடன், உணவு போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கான செலவுகளையும் கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
விலை உயர்வு இருந்தபோதிலும், பலர் தங்களின் கோடைக்கால சுற்றுலாத் திட்டங்களை முழுமையாகக் கைவிடாமல், மற்ற செலவுகளைக் குறைத்துச் சமாளிக்க முயன்று வருகின்றனர்.










