கனடாவில் பலதுணை உறவுமுறையில் (Polyamory) ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற போதிலும், நாட்டின் சட்டக் கட்டமைப்பு இன்னும் அதற்குத் தயாராகவில்லை எனச் சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
கனடாவில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் திருமண உறவில் இருப்பது (Polygamy) சட்டவிரோதமானது.
ஆனால், திருமண ஒப்பந்தம் இன்றி ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் பரஸ்பர சம்மதத்துடன் வாழும் ‘Polyamory’ முறை சட்டப்பூர்வமானது.
தற்போதுள்ள குடும்பச் சட்டங்கள் அனைத்தும் இருவர் சார்ந்த உறவுமுறைக்காகவே (Two-person relationships) வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதனால் சொத்துரிமை, குழந்தைகள் வளர்ப்பு மற்றும் நிதிப் பாதுகாப்பு போன்ற விடயங்களில் பலதுணை உறவில் இருப்பவர்கள் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) போன்ற மாகாணங்களில் இரண்டுக்கும் மேற்பட்டவர்களைப் பெற்றோர்களாக அங்கீகரிக்க வாய்ப்புள்ளது.
ஆனால், ஆல்பர்ட்டா (Alberta) போன்ற மாகாணங்களில் சட்டங்கள் மிகவும் இறுக்கமாக உள்ளன.
சட்டரீதியான பாதுகாப்பு இல்லாததால், இத்தகைய உறவில் இருப்பவர்கள் தங்களுக்குள் ‘ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை’ (Co-ownership or Cohabitation agreements) உருவாக்கிக் கொள்ளுமாறு சட்டத்தரணிகள் மார்கஸ் சிக்ஸ்டா (Marcus Sixta) மற்றும் ஹிலாரி ஆங்க்ரோவ் (Hilary Angrove) ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.
இருப்பினும், உறவு முறியும் போது நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் இன்னும் தெளிவற்ற நிலையிலேயே உள்ளன.










