அமெரிக்காவின் லூசியானா (Louisiana) மாநிலம், ஸ்ரீவ்போர்ட் (Shreveport) நகரில் நபர் ஒருவர் தனது சொந்தப் பிள்ளைகள் 7 பேர் உட்பட மொத்தம் 8 சிறுவர்களை சுட்டுக்கொன்ற கோரச் சம்பவம் உலகையே அதிரவைத்துள்ளது.
31 வயதுடைய ஷமார் எல்கின்ஸ் (Shamar Elkins) என்ற நபர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணைச் சுட்டுவிட்டு, இரண்டு வெவ்வேறு இடங்களில் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.
கொல்லப்பட்ட 8 சிறுவர்களும் 3 முதல் 11 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில் 7 பேர் அந்த நபரின் பிள்ளைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தப்பிக்க முயன்ற ஒரு சிறுவன் கூரையின் மேல் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டான்.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து தப்பியோடிய ஷமார் எல்கின்ஸை பொலிஸார் துரத்திச் சென்று சுட்டுக் கொன்றனர்.
குடும்பத் தகராறு மற்றும் விவாகரத்து தொடர்பான பிரச்சனைகளே இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
ஸ்ரீவ்போர்ட் மேயர் டாம் ஆர்செனோ (Tom Arceneaux), இது நகரின் வரலாற்றிலேயே மிக மோசமான துயரச் சம்பவம் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் நிகழ்ந்த மிக மோசமான துப்பாக்கிச் சூடு இதுவாகும்.
