றொரண்டோவில் யூத சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து, போலித் துப்பாக்கியால் (Replica firearm) சுட்ட சம்பவங்கள் தொடர்பாக 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வான் (Vaughan) பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய ரஸ்லான் நோவ்ருசோவ் (Ruslan Novruzov) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து இரண்டு ‘ஜெல் பிளாஸ்டர்’ (Gel blaster) வகை போலித் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த வியாழக்கிழமை இரவு நார்த் யோர்க் (North York) பகுதியில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்திற்கு வெளியே நின்றிருந்த மூவர் மீது, ஓடும் வாகனத்திலிருந்து போலித் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது.
இதே நபர் கடந்த ஏப்ரல் 30 அன்றும் பாத்தர்ஸ்ட் ஸ்ட்ரீட் (Bathurst Street) பகுதியில் இவ்வாறான தாக்குதலை நடத்தியதாகப் பொலிஸார் நம்புகின்றனர்.
இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. நீல நிற Lexus SUV ரக வாகனத்தைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
யூத சமூகத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நோக்குடன் இவை நடத்தப்பட்டுள்ளதால், இது வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட குற்றமாக (Hate-motivated offence) விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டு (Doug Ford) மற்றும் றொரண்டோ மேயர் ஒலிவியா சௌ (Olivia Chow) ஆகியோர் இந்தச் செயலை “அருவருப்பானது” எனக் கண்டித்துள்ளார்.
அதேபோல் யூத எதிர்ப்புக் கொள்கையை (Antisemitism) ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளனர்.
ரொறன்ரோவில் அண்மைக்காலமாக யூத சமூகத்தினருக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரிய விடயமாகப் பார்க்கப்படுகிறது.
