மக்கள் போராட்டங்களால் அதிக செலவு – பொலிசார் கவலை!

கனடாவில் அண்மைக் காலங்களில் போராட்டங்களின் எண்ணிக்கை மற்றும் அதில் பங்கேற்கும் மக்களின் அளவு வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி 14 அன்று டொராண்டோவின் (Toronto) யோங் வீதியில் (Yonge Street) சுமார் 350,000 மக்கள் திரண்டு நடத்திய போராட்டமானது, அந்நகர வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒருநாள் போராட்டமாக பதிவாகியுள்ளது.

ஈரான் (Iran) மீதான தற்போதைய இராணுவத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அங்குள்ள மக்களுக்கு ஆதரவாகவும் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

டொராண்டோ மட்டுமல்லாது வான்கூவர் (Vancouver), மொன்றியால் (Montreal), மற்றும் ஒட்டாவா (Ottawa) போன்ற நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளில் கால்கரி (Calgary) நகரில் போராட்டங்கள் 300 சதவீதமும், வான்கூவரில் 75 சதவீதமும் அதிகரித்துள்ளன.

இது பொலிஸாரின் மேலதிக நேர வேலைப்பளு மற்றும் நிதிச் சுமையை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Latest Articles