தொலைத்தொடர்பு துறையில் AI பயன்பாடு – கடும் கட்டுப்பாடுகளைக் கோரும் ஊழியர் சங்கங்கள்!

கனடாவின் தொலைத்தொடர்பு துறை ஊழியர்கள், இத்துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தக் கோரி அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

Unifor, United Steelworkers மற்றும் CUPE உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய கனடிய தொலைத்தொடர்பு தொழிலாளர் கூட்டணி (Canadian Telecommunications Workers’ Alliance), ஒட்டாவாவில் (Ottawa) உள்ள நாடாளுமன்றக் குழுவிடம் தமது கவலைகளை முன்வைத்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள அழைப்பு நிலைய ஊழியர்களின் பேச்சு வழக்கை (Accents) மாற்றி, அவர்கள் கனடாவில் இருப்பதைப் போன்ற விம்பத்தை ஏற்படுத்த சில நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக Unifor பணிப்பாளர் ரோச் லெப்லாங்க் (Roch Leblanc) குற்றம் சாட்டியுள்ளார்.

ஊழியர்களின் நடமாட்டம் மற்றும் வேலை நேரத்தைத் துல்லியமாகக் கண்காணிக்க AI பயன்படுத்தப்படுவதாகவும், இது ஊழியர்களுக்கு உளவியல் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் சுமார் 20,000 வேலைகள் தானியங்கி முறை மற்றும் வெளிநாட்டு அவுட்சோர்சிங் காரணமாக இழக்கப்பட்டுள்ளன.

AI பயன்பாடு இந்த நிலைமையை மேலும் மோசமாக்கும் என சங்கங்கள் அஞ்சுகின்றன.

புதிய தேசிய AI உத்தியை வகுக்கும் போது, தொழிலாளர் சந்தையில் அதன் தாக்கங்கள் குறித்து பரிசீலிக்கப்படும் என செயற்கை நுண்ணறிவு அமைச்சர் இவான் சாலமன் (Evan Solomon) தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களுடன் பேசும்போது AI பயன்படுத்தப்பட்டால் அது குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நிரந்தர மத்திய பணிக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் இக்கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10

Related Articles

Latest Articles