மனிடோபா (Manitoba) மாகாணத்தில் உள்ள சர்ச்சில் (Churchill) துறைமுகத்தின் ஊடாக திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) ஏற்றுமதி செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மத்திய அரசு ஒரு கடுமையான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளதாக மாகாண முதல்வர் வப் கினியூ (Wab Kinew) தெரிவித்துள்ளார்.
2030-ஆம் ஆண்டுக்குள் சர்ச்சில் துறைமுகத்திலிருந்து LNG ஏற்றுமதியைத் தொடங்க வேண்டும், இல்லையெனில் இந்தத் திட்டத்திற்கான மத்திய அரசின் நிதி மற்றும் ஆதரவு ரத்து செய்யப்படலாம் என பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
வட மாகாணங்கள் ஊடாக ஒரு வர்த்தகப் பாதையை உருவாக்கி, மேற்கு கனடாவிலிருந்து எரிசக்தியை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்வதே இதன் இலக்காகும்.
இதற்காக ஒரு புதிய குழாய் வழித்தடத்தை (Pipeline) அமைப்பதும் ஆலோசனையில் உள்ளது.
“மத்திய அரசு பெரிய திட்டங்களை விரைவாகச் செய்து முடிக்க விரும்புகிறது.
இந்த நான்கு ஆண்டு காலக்கெடுவுக்குள் நாம் செயல்படாவிட்டால், மனிடோபா மற்றும் கனடியப் பொருளாதாரம் பெற வேண்டிய பெரும் நன்மைகளை இழக்க நேரிடும்” என்று வப் கினியூ எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவுடனான தற்போதைய வர்த்தகச் சிக்கல்கள் காரணமாக, மாற்று வர்த்தகப் பாதைகளைக் கண்டறிய சர்ச்சில் துறைமுகம் ஒரு முக்கியமான வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
பனிக்கட்டிகளை உடைக்கும் கப்பல்களைப் (Icebreakers) பயன்படுத்தி இத்துறைமுகத்தின் செயல்பாட்டுக் காலத்தை நீட்டிப்பது குறித்தும் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.










