லிபரல் அரசு தனது பொருளாதார அறிக்கையில், அதிகரித்த அரச வருவாயை மீண்டும் மக்களுக்கே வழங்கும் நோக்கில் பல புதிய செலவீனங்களை அறிவித்துள்ளது.
நிதியமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பேன் (François-Philippe Champagne) தாக்கல் செய்த அறிக்கையில், $54.5 பில்லியன் புதிய செலவீனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதில் நிகர புதிய செலவு $37.5 பில்லியனாகும்.
கடந்த ஆண்டின் நிதிப்பற்றாக்குறை $66.9 பில்லியனாகக் குறைந்துள்ளது.
இது முன்பு கணிக்கப்பட்ட $78.3 பில்லியனை விட $11 பில்லியன் குறைவாகும்.
ஜிஎஸ்டி (GST) சலுகை இனி ‘கனடா மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பலன்’ (Canada Groceries and Essentials Benefit) என அழைக்கப்படும்.
ஜூன் 5 முதல் இதில் 50 சதவீத அதிகரிப்பு வழங்கப்படும். மேலும், நான்கு மாதங்களுக்கான எரிபொருள் வரி இடைநிறுத்தமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரான் போர் மற்றும் அமெரிக்காவின் வரிக் கொள்கைகளால் (U.S. Tariffs) உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் கனடாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 1.1 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 1.9 சதவீதமாகவும் குறைய வாய்ப்புள்ளது.
கட்டுமானத் துறையில் இளைஞர்களை ஊக்குவிக்க பில்லியன் கணக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அறிவித்த $25 பில்லியன் மதிப்பிலான தேசிய நல நிதி (Sovereign Wealth Fund) ஆகியவையும் இதில் அடங்கும்.
எதிர்காலப் பற்றாக்குறை 2030-31 ஆண்டிற்குள் $53.2 பில்லியனாகக் குறையும் எனக் கணிக்கப்பட்டாலும், பட்ஜெட்டை முழுமையாகச் சமநிலைப்படுத்தும் (Balanced Budget) திட்டம் எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
