உலகக்கிண்ணக் காற்பந்துப் போட்டி – ஒன்ராறியோவில் அதிகாலை 4 மணி வரை மதுபானம் விற்க அனுமதி!

FIFA உலகக்கிண்ணக் காற்பந்துப் போட்டிக் காலத்தில், ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் மதுபானச்சாலைகள் அதிகாலை 4 மணி வரை மதுபானங்களை விற்பனை செய்ய போர்ட் அரசாங்கம் (Ford government) அனுமதி வழங்கவுள்ளது.

ஜூன் 11 முதல் ஜூலை 19 வரையான இத்தொடரின் போது, வணிகங்களை ஊக்குவிக்கவும், விருந்தோம்பல் துறை ஊழியர்களுக்கு ஆதரவளிக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக அதிகாலை 2 மணி வரை மட்டுமே மதுபானம் விற்க அனுமதி உள்ள நிலையில், இம்முறை AGCO அமைப்பிடம் சிறப்பு அனுமதிப்பத்திரம் எதையும் பெறாமலேயே அனைத்து உரிமம் பெற்ற நிறுவனங்களும் அதிகாலை 4 மணி வரை இயங்க முடியும்.

அத்துடன், றொரண்டோ (GTA) மற்றும் ஒட்டாவா (Ottawa) ஆகிய பகுதிகளில் உள்ள 27 LCBO விற்பனை நிலையங்களின் வேலை நேரமும் நீடிக்கப்படவுள்ளது.

ரசிகர்கள் இப்போட்டிகளை முழுமையாகக் கொண்டாடுவதற்கும், உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த முடிவு பெரிதும் உதவும் என மாகாண சட்டமா அதிபர் டக் டவுனி (Doug Downey) தெரிவித்துள்ளார்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles