ஈரானில் ஆட்சி மாற்றத்தை வலியுறுத்தி ஈரானிய புலம்பெயர் மக்கள் கனடாவின் Richmond Hill நகரில் ஆயிரக்கணக்கில் திரண்டு,நடத்திய பாரிய பேரணி!
ஈரானில் தற்போதுள்ள ஆட்சிக்கு எதிராக Richmond Hill-இன் Yonge Street வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாகச் சென்றனர்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரானிய ஆட்சிக்கு எதிராக மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகளை அவர்கள் வரவேற்றுள்ளனர்.
நாடு கடத்தப்பட்ட ஈரானிய இளவரசர் Reza Pahlavi-ஐ மீண்டும் தலைவராகக் கொண்டுவர வேண்டும் என்றும், அவர் ஒருவரே ஈரானை ஜனநாயகப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
“இந்த ஆட்சி ஈரானை ஆக்கிரமித்துள்ளது, அவர்கள் எமது மக்களைக் கொல்கிறார்கள்” என ஒருங்கிணைப்பாளர் Alan Bostakian தெரிவித்துள்ளார்.
எனினும், ஈரானில் உள்ள இணைய முடக்கம் காரணமாக அங்குள்ள உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் பலர் கவலையடைந்துள்ளனர்.
அதேவேளை, டொராண்டோவில் (Toronto) உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால் ஒரு குழுவினர் திரண்டு, ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.










