மத்திய கிழக்கில் உள்ள Strait of Hormuz கடற்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், கனடாவின் Daily Bread Food Bank நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் $90,000 டாலர் மதிப்பிலான உணவுப் பொருட்கள் கொண்டு வந்த கப்பல் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அருகேயுள்ள அந்த முக்கியமான கடல் வழித்தடத்தில் புதன்கிழமை அன்று மூன்று சரக்குக் கப்பல்கள் தாக்கப்பட்டன.
இதில் ஒரு கப்பலில் Toronto மக்களுக்காகக் கொண்டு வரப்பட்ட அரிசி அடங்கிய சுமார் ஆறு கொள்கலன்கள் (Containers) இருந்ததாக Daily Bread Food Bank தலைமை அதிகாரி Neil Hetherington தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தால் பல்லாயிரக்கணக்கான மக்களின் உணவுத் தேவையில் தாமதம் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
கடற்பயணிகளின் பாதுகாப்பு குறித்துக் கவலை வெளியிட்டுள்ள அவர், காப்பீடு (Insurance) மூலம் நிதி இழப்பைச் சமாளிக்க முடியும் என்றாலும், உணவிற்காகக் காத்திருக்கும் மக்களுக்கு தடையின்றி உணவு வழங்க மாற்றுத் திட்டங்கள் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
ஈரான் போர் சூழலால் இந்தக் கடல் பகுதியில் இதுவரை 12க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Image – CTV News










