King Charles-ஐச் சந்தித்த பூர்வீகக்குடி தலைவர்கள்: Alberta பிரிவினை விவகாரம் குறித்து கவலை!

கனடாவின் Alberta மாகாணத்தைப் பிரிக்கும் பிரிவினைவாத முயற்சி குறித்து King Charles தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளதாக Confederacy of Treaty 6 First Nations அமைப்பின் தலைமை அதிகாரி Grand Chief Joey Pete தெரிவித்துள்ளார்.

பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, மாகாணத்தைப் பிரிக்கும் முயற்சி ஒப்பந்த உரிமைகளுக்கு (Treaty rights) அச்சுறுத்தலாக இருப்பதாகப் பூர்வீகக்குடி தலைவர்கள் மன்னரிடம் எடுத்துரைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, இது குறித்து மேலும் அறிந்து கொள்ள மன்னர் விருப்பம் தெரிவித்ததோடு, அடுத்த வாரம் பிரதமர் Mark Carney-யைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, Alberta மாகாண அமைச்சர் Rajan Sawhney, ஒப்பந்த மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

மாகாண முதலமைச்சர் Danielle Smith பிரிவினைவாத இயக்கத்தைக் கண்டிக்கத் தவறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் Naheed Nenshi குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த விவகாரம் கனடிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Image – cbc.ca

Related Articles

Latest Articles