கனடா Toronto நகரின் டவுன்டவுன் (Downtown) பகுதியில், போதைப்பொருள் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தியதால் (Overdose) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதாக Toronto Public Health எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த பாதிப்புகள் பதிவாகியுள்ளன. எந்த வகையான போதைப்பொருட்களால் இந்த பாதிப்பு ஏற்பட்டது என்பதை சுகாதார அதிகாரிகள் இன்னும் துல்லியமாகக் குறிப்பிடவில்லை.
இருப்பினும், கண்ணாடி போன்ற தோற்றமுடைய ஒரு தெளிவான பொருள் (Clear substance) அப்பகுதியில் புழக்கத்தில் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த சம்பவங்களால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அல்லது உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.
போதைப்பொருட்களைப் பயன்படுத்தும்போது பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு Toronto Public Health நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் வலியுறுத்தியுள்ளதுடன், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.










