கனடாவில் சீனப் பொலிஸாரின் அச்சுறுத்தல் – மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எச்சரிக்கை!

கனடாவில் வசிக்கும் சீன நாட்டவர்களை சீனா பொலிஸார் ரகசியமாகத் துன்புறுத்தி வருவது தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் நீதிமன்ற ஆவணங்கள் மூலம் வெளியாகியுள்ளன.

அதன்படி, முன்னாள் RCMP அதிகாரியான வில்லியம் மேஜர் (William Majcher) மீதான வெளிநாட்டுத் தலையீடு தொடர்பான வழக்கில், குறைந்தது 25 கனடிய குடியிருப்பாளர்கள் சீனப் பொலிஸாரால் இலக்கு வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும், “ஆபரேஷன் பாக்ஸ் ஹண்ட்” (Operation Fox Hunt) என்ற திட்டத்தின் கீழ், நிதிக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சீனர்களை கனடாவிலிருந்து வலுக்கட்டாயமாக நாடு கடத்தச் சீனப் பொலிஸார் முயன்றுள்ளனர்.

இதில் வன்கூவரைச் சேர்ந்த கெவின் சன் (Kevin Sun) என்பவரை சீனாவுக்குத் திருப்பியனுப்ப மேஜர் உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு, சீனாவுக்குத் திருப்பியனுப்பப்படும் நபர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

றொரண்டோவில் (Toronto) வசிக்கும் முன்னாள் சீன நீதிபதி ஒருவரை மிரட்டுவதற்காக, சீனாவில் உள்ள அவரது சகோதரியைச் சிறையிலடைத்து, மகனைக் கடத்திய சம்பவமும் நீதிமன்றத்தில் விவரிக்கப்பட்டது.

பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) சமீபத்தில் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ததோடு, RCMP மற்றும் சீனாவின் MPS இடையே குற்றங்களைத் தடுக்க புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் (MOU) கையெழுத்திட்டுள்ளார்.

சீனப் பொலிஸார் கனடிய சட்டங்களுக்குப் புறம்பாகச் செயல்படுவதால், இந்த புதிய ஒப்பந்தத்தின் விபரங்களை அரசாங்கம் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

இந்த விவகாரம் கனடாவில் வசிக்கும் புலம் பெயர்ந்த சமூகத்தினரிடையே, குறிப்பாக ஹொங்கொங் மற்றும் சீன எதிர்ப்பாளர்களிடையே பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

 

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles