ஒன்ராறியோ பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசிகளுக்கு முழுமையான தடை – மாகாண அரசு அதிரடி ஆலோசனை!

ஒன்ராறியோ பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி பயன்பாடு ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், அவற்றுக்கு முழுமையான தடை விதிக்க மாகாண அரசு திட்டமிட்டுள்ளது.

ஒன்ராறியோ கல்வி அமைச்சர் பால் கலண்ட்ரா (Paul Calandra), பாடசாலை வளாகங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளை முழுமையாகத் தடை செய்வது குறித்துத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய மேனிடோபா (Manitoba) மாகாணம் எடுத்துள்ள முயற்சியையும் பாராட்டினார்.

ஒன்ராறியோவிலும் அத்தகைய தடையை மத்திய அரசுடன் இணைந்து இன்னும் விரிவாகச் செயல்படுத்த விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2024 முதல் நடைமுறையில் உள்ள விதிகளின்படி, தரம் 6 வரையிலான மாணவர்கள் தொலைபேசிகளைப் பார்வையில் படாதவாறு வைத்திருக்க வேண்டும்.

தரம் 7 முதல் 12 வரையிலான மாணவர்கள் வகுப்பறைகளில் ஆசிரியர் அனுமதியின்றித் தொலைபேசி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோ NDP தலைவி மார்ட் ஸ்டைல்ஸ் (Maritit Stiles), சமூக வலைதளத் தடையை ஆதரித்தாலும், பாதுகாப்பு மற்றும் பயணக் காரணங்களுக்காகப் பிள்ளைகள் தொலைபேசி வைத்திருப்பது அவசியம் என்றும், அதை முழுமையாகத் தடை செய்வது சாத்தியமற்றது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா (Australia) போன்ற நாடுகள் ஏற்கனவே 16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக வலைதளக் கணக்குகளை வைத்திருப்பதைத் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பாடசாலை சபை அறங்காவலர்களை (Trustees) மீண்டும் பணியில் அமர்த்தும் எண்ணம் தற்போது இல்லை என்றும்

பாடசாலை நிர்வாகங்களைச் சீரமைப்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் கலண்ட்ரா தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles