ஈரான் (Iran) மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் (U.S.-Israeli) நடத்தி வரும் தாக்குதல்களில் கனடா ஒருபோதும் பங்கேற்காது என்று பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பயங்கரவாத ஏற்றுமதியைத் தடுப்பதில் கனடா உறுதியாக இருந்தாலும், தற்போதைய இராணுவத் தாக்குதல்களில் கனடா ஈடுபடவில்லை, இனிமேலும் ஈடுபடாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.
கியூபெக் பிளாக் (Bloc Québécois) தலைவர் ஈவ்-பிரான்சுவா பிளான்ஷெட் (Yves-François Blanchet), சர்வதேச விவகாரங்களில் பிரதமரின் அணுகுமுறையை விமர்சித்ததுடன், மத்திய கிழக்கு விவகாரத்தில் கனடாவின் தெளிவான பார்வையை முன்வைக்குமாறு கோரினார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் இது குறித்துப் பேசியுள்ளதாகக் கார்னி குறிப்பிட்டார்.
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாக பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வது மற்றும் எரிசக்தி விலை உயர்வு குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டுள்ளது.
