அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நேற்று ஈரான் மீது தாக்குதலை நடத்திய நிலையில் ஈரானும் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டது.
இந்தப் போர் பெரும் பதற்றமான சூழலை உருவாக்கியிருக்கும் நிலையில், ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
முன்னதாக இதை மறுத்த ஈரான், இன்று காலை அதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
தாக்குதல் தொடங்கியபோது அயதுல்லா அலி கமேனி டெஹ்ரான் நகர மையத்தில் உள்ள தனது வளாகத்தில் இருந்ததாக ஈரான் அரசு தொலைக்காட்சி விவரித்தது. ஏர்பஸ்ஸில் இருந்து எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் அந்த இடம் கடுமையாக குண்டுவீசப்பட்டதைக் காட்டியது.
தாக்குதலுக்குப் பிறகு அயதுல்லா அலி கமேனியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய உயர் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நேற்று ஈரான் மீது தாக்குதலை நடத்தின. ஈரானின் இராணுவ இலக்குகள், அணு ஆராய்ச்சி தொடர்புடைய இடங்கள், ஏவுகணை தளங்கள், விமான பாதுகாப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதில், ஈரான் உச்சத் தலைஅவர் அயதுல்லா அலி கமேனி வசித்த இடங்களும் அடங்கும்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவ தளங்களை கொண்டுள்ள பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடங்கியது.
இஸ்ரேலின் தற்காப்பு அமைப்புகள் அவற்றில் பெரும்பாலானவற்றை தடுத்தன, ஆனால் சில இடங்களில் சேதம் ஏற்பட்டது.
கொமேனியின் மகள், மருமகன், முக்கிய ஆலோசகர் அலி ஷாம்கானி,புரட்சிகர காவல்படைத் தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏர் கனடா, மார்ச் 3 ஆம் தேதி வரை துபாய்க்கான அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது, அதே நேரத்தில் “மத்திய கிழக்கின் இராணுவ நிலைமை காரணமாக” இஸ்ரேலுக்கான விமானங்கள் மார்ச் 8 ஆம் திகதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
“நாங்கள் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம், அதற்கேற்ப எங்கள் அட்டவணையை மாற்றியமைப்போம்” என்று எயார் கனடா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது, வாடிக்கையாளர்கள் தங்கள் ஒன்லைன் தரவுத்தளத்தின் மூலம் நேரடி புதுப்பிப்புகளைப் பார்க்குமாறு வலியுறுத்துகிறது.










