Ontario மாணவர்களுக்கான கல்வி உதவித் திட்டமான OSAP-இல், மாகாண அரசு வழங்கிய நிதியுதவித் தொகையை (Grants) பெருமளவு குறைத்து, அவற்றை கடனாக (Loans) மாற்ற அரசு தீர்மானித்துள்ளது.
இந்த மாற்றங்கள் 2026-2027 கல்வியாண்டு முதல் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, அதிகபட்ச நிதி உதவி பெறும் மாணவர்கள், எதிர்வரும் இலையுதிர்காலத்தில் சுமார் $3,500 வரை நிதியுதவியை இழக்க நேரிடும் என்றும், அந்தத் தொகை கடனாக மாற்றப்படும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த நடவடிக்கை மாணவர்களை பெரும் கடன் சுமைக்கு தள்ளும் என மாணவர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
புதிய மாற்றங்களுடன் கூடிய OSAP Calculator இந்த வசந்த காலத்தில் (Spring) வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவானது மாணவர்களின் எதிர்காலக் கல்வித் திட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.










