கனடாவில் குடிவரவு விதிகளை மீறியவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 3,323 இந்தியப் பிரஜைகள் கனடாவிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.
CBSA உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த காலப்பகுதியில் கனடாவிலிருந்து அகற்றப்பட்ட வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம். இரண்டாவது இடத்தில் 1,573 பேருடன் Mexico உள்ளது.
2025 ம் ஆண்டு 3,779 இந்தியர்கள் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாத எண்ணிக்கையே அதன் சுமார் 88 சதவீதத்தை எட்டியுள்ளது. 2024-ல் இந்த எண்ணிக்கை 2,004 ஆக இருந்தது.
மேலும், ஜூன் 30 நிலவரப்படி 7,669 இந்தியப் பிரஜைகளின் வெளியேற்ற நடவடிக்கைகள் இன்னும் செயல்முறையில் இருப்பதாக CBSA தரவுகள் காட்டுகின்றன.
வெளியேற்றப்பட்ட 3,323 பேரும் ஒரே காரணத்திற்காக வெளியேற்றப்பட்டவர்கள் அல்ல. பொதுவாக நிராகரிக்கப்பட்ட அகதித்தஞ்ச கோரிக்கை, immigration விதிமீறல்கள், குற்றச்செயல் உள்ளிட்ட பல காரணங்களால் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்படலாம்.










