றொரண்டோவில் பதற்றம் – 16 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

றொரண்டோ (Toronto) நகரம் முழுவதும் உள்ள 16 பாடசாலைகளுக்கு ஒரே நபரால் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 16 பாடசாலைகளுக்குத் தொலைபேசி ஊடாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த மிரட்டல்களை அடுத்து லெஸ்லிவில் (Leslieville) பகுதியில் உள்ள புரூஸ் ஜூனியர் பொதுப் பாடசாலை (Bruce Jr. Public School) மற்றும் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில் உள்ள செயின்ட் அகஸ்டின் செமினரி (St Augustine Seminary) ஆகியன தற்காலிகமாக வெளியேற்றப்பட்டன.

பொலிஸார் இரு பாடசாலைகளையும் முழுமையாகச் சோதனை செய்த பின்னர், அங்கு ஆபத்து ஏதுமில்லை என உறுதிப்படுத்தினர்.

அதன் பின்னரே மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இந்த மிரட்டல்கள் நம்பகமானவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

இருப்பினும், ஒரே நபரால் இந்த மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த TDSB ஊடகப் பேச்சாளர் ரையன் பேர்ட் (Ryan Bird), மிரட்டல்களை மிகவும் தீவிரமாக அணுகுவதாகவும், பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் பெற்றோருக்குத் தேவையான தகவல்கள் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து ரொறன்ரோ பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles