மிசிசாகா (Mississauga) நகரில் உள்ள Twin Pines Mobile Home Park நிலத்தை, புதிய வீட்டுத் திட்டங்களுக்காகப் பயன்படுத்த பீல் பிராந்திய (Peel Region) நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனால் அங்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் சுமார் 130 குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
தற்போதுள்ள குறைந்த அடர்த்தி கொண்ட இந்த நிலத்தில், 1,000-க்கும் மேற்பட்ட புதிய மலிவு விலை வீடுகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளதாக Peel Housing Corporation (PHC) தெரிவித்துள்ளது.
அங்கிருந்து வெளியேறும் குடியிருப்பாளர்களுக்கு 50,000 டொலர் இழப்பீடு அல்லது வாடகை மானியம் ஆகிய இரண்டு விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்தத் தொகை தற்போதைய சந்தை விலையில் புதிய வீடு வாங்கப் போதுமானதல்ல என்றும், வாழ்நாள் முழுவதையும் கழித்த இடத்தை விட்டுச் செல்வது தங்களுக்குப் பெரும் மன உளைச்சலைத் தருவதாகவும் குடியிருப்பாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த இழப்பீட்டைப் பெறுவதற்கு 2026 ஏப்ரல் 30-ஆம் திகதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
நிலத்தின் உரிமையாளர் பீல் நிர்வாகம் என்பதால், குடியிருப்பாளர்கள் சட்டரீதியாகப் போராடுவதிலும் சிக்கல் நீடிக்கிறது.










