ட்ரம்பின் நிலைப்பாட்டினால் மத்திய கிழக்கு போர் தீவிரம்: வெளியேறத் துடிக்கும் 2,000 கனேடியர்கள் – இராணுவத்தின் அடுத்தகட்ட நகர்வு!

மத்திய கிழக்கில் அமெரிக்கா (U.S.) மற்றும் இஸ்ரேல் (Israel) முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) இராணுவ நடவடிக்கை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், அங்கிருந்து வெளியேற சுமார் 2,000 கனேடியர்கள் உதவி கோரியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த பிராந்தியத்தில் சுமார் 107,000 கனேடியர்கள் வசித்து வருகின்றனர்.

அவர்களில் லெபனானில் (Lebanon) இருந்து 57 பேரும், கட்டாரில் (Qatar) இருந்து சவூதி அரேபியா (Saudi Arabia) ஊடாக 200 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஈரானின் அடுத்த தலைவரைத் தீர்மானிப்பதில் தான் தலையிட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) கூறியிருப்பது போர் சூழலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles