கனடாவில் போலி மிரட்டல் கும்பல்களின் வன்முறை – இந்தியாவை தளமாக கொண்ட கும்பல் சிக்கியது!

கனடா, ஒன்ராறியோவின் (Ontario) பிராம்ப்டன் (Brampton) மற்றும் மிசிசாகா (Mississauga) பகுதிகளில், சர்வதேசக் குற்றக் கும்பல்களைப் பார்த்துப் பழகிய போலி மிரட்டல் கும்பல்களின் (Copycat Criminals) வன்முறைகள் அதிகரித்துள்ளதாகப் பிராம்ப்டன் நகர சபை உறுப்பினர் குர்பர்தாப் சிங் தூர் (Gurpartap Singh Toor) தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக நள்ளிரவில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அதைத் தங்கள் தொலைபேசிகளில் காணொளியாகப் பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மக்களை அச்சுறுத்தி இக்கும்பல் பணம் பறித்து வருகிறது.

கடந்த மே மாதம், தெற்காசிய மற்றும் சீக்கிய சமூகத்தினரை இலக்கு வைத்த மிரட்டல் சம்பவங்கள் தொடர்பாகப் பில் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) 17 பேரைக் கைது செய்தனர்.

மேலும், இந்த வாரத்தில் இந்தியாவைத் தளமாகக் கொண்டியங்கும் மூன்று குற்றக் குழுக்களைச் சேர்ந்த 24 பேரை RCMP, FBI மற்றும் LAPD ஆகிய அமைப்புகள் இணைந்து கைது செய்துள்ளன.

இவ்வாறான உயர்மட்டக் கைதுகள் இடம்பெற்ற போதிலும், உள்ளூர் மிரட்டல்கள் தொடர்வதால் மக்கள் மத்தியில் அச்சம் நீடித்து வருகின்றது.

 

Related Articles

Latest Articles