கனடாவில் இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள் – விபரங்களை வழங்கத் தவறினால் அபராதம்!

கனடாவில் 2026 மே 12 ஆம் திகதி ‘மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள்’ (Census Day) ஆகக் கடைப்பிடிக்கப்படுகிறது. சட்டப்படி அனைத்துக் குடிமக்களும் இதில் பங்கேற்பது கட்டாயமாகும்.

புள்ளிவிபரச் சட்டத்தின் (Statistics Act) கீழ் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

மே 12 என்பது ஒரு காலக்கெடு அல்ல, மாறாக அன்றைய தினத்தை அடிப்படையாகக் கொண்டு தகவல்களை வழங்க வேண்டிய குறிப்புத் திகதியாகும்.

கணக்கெடுப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்யத் தவறினால் $500 வரையிலும், மேலதிக விபரங்களை வழங்க மறுத்தால் $1,000 வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம்.

மேலும், தவறான தகவல்களை வழங்குவது குற்றவியல் நடவடிக்கைகளுக்கு இட்டுச்செல்லும்.

முன்னதாக இதற்காக வழங்கப்பட்டு வந்த சிறைத்தண்டனை 2017 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தால் நீக்கப்பட்டது.

படிவங்களைச் சமர்ப்பிக்காத வீடுகளுக்கு மே மாத நடுப்பகுதியில் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்படும்.

ஜூன் மாதம் முதல் தொலைபேசி அல்லது நேரடி வருகை மூலம் அதிகாரிகள் தொடர்புகொள்வார்கள்.

ஜூலை நடுப்பகுதியில் இறுதி எச்சரிக்கை கடிதம் அனுப்பப்படும்.

தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிக்கவும், பாடசாலைகள், போக்குவரத்து மற்றும் அரச திட்டங்களைத் திட்டமிடவும் இந்தத் தரவுகள் மிகவும் அவசியமானவை.

இந்தக் கணக்கெடுப்பின் முழுமையான முடிவுகள் வெளியாக சுமார் 18 மாதங்கள் வரை ஆகலாம் என கனடா புள்ளிவிபரத் திணைக்களம் (Statistics Canada) தெரிவித்துள்ளது.

இதற்கான கடிதம் உங்களிடம் இல்லையென்றாலோ அல்லது தொழில்நுட்ப உதவி தேவைப்பட்டாலோ 1-833-852-2026 என்ற எண்ணிற்கு அழைத்து உதவி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles