“ஈரான் அணு ஆயுதத் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் சாத்தியமில்லை” – நட்பு நாடுகளுக்கு துணை நிற்பதில் தயக்கமில்லை என்கிறார் கார்னி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனடியப் பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் கான்பெராவில் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் திறனை முழுமையாக இழக்கும் வரை முறையான போர்நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த முடியாது என இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

“தற்போது போர் பரவி வருவதை நாம் காண்கிறோம். பொதுமக்கள் மற்றும் பொதுக் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். இவை போர்நிறுத்தத்திற்கு அவசியமான நிபந்தனைகளாகும்,” என கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.

ஈரானின் இராணுவ இலக்குகள் மீது சனிக்கிழமை முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இரு நாடுகளும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

ஈரானுக்கு எதிரான தாக்குதலில் கனடா நேரடியாகப் பங்கேற்குமா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மார்க் கார்னி,

“தாக்குதலில் பங்கேற்பதை என்னால் ஒருபோதும் திட்டவட்டமாக நிராகரிக்க முடியாது. கனடியர்களைப் பாதுகாக்கவும், எமது நட்பு நாடுகளுக்குத் தேவைப்படும்போது அவர்களுடன் துணை நிற்கவும் நாம் எப்போதும் தயார்” எனத் தெரிவித்தார்.

அதேபோல், உலகளாவிய ஒழுங்குமுறை சிதைந்து வருவதன் அறிகுறியாகவே ஈரான் மீதான தாக்குதல்களைத் தான் பார்ப்பதாகவும் (Australia) Melbourne நகரில் உள்ள Lowy Institute அமைப்பில் உரையாற்றிய அவர், இந்தத் தாக்குதல்களைத் தான் “சிறு வருத்தத்துடன்” ஆதரிப்பதாகவும் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Related Articles

Latest Articles