உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் அடுத்த நாக்-அவுட் (Knockout) சுற்றில், கனடிய ஆண்கள் காற்பந்து அணி மொராக்கோவை (Morocco) எதிர்கொள்ளவுள்ள நிலையில், நாடு முழுவதுமுள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
பிபா (FIFA) தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள பலம் வாய்ந்த மொராக்கோ அணியை, 30-வது இடத்தில் இருக்கும் கனடா (Canada) எதிர்கொள்வது ஒரு சவாலான போட்டியாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் மைதானத்தில் (Houston Stadium, Texas) இப்போட்டி நடைபெறவுள்ளது.
கடந்த வாரம் லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரில் நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்காவை (South Africa) 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, கனடா உலகக் கிண்ண வரலாற்றில் தனது முதலாவது நாக்-அவுட் வெற்றியைப் பதிவு செய்திருந்தது.
இன்றைய போட்டியை முன்னிட்டு ‘தி வொயேஜர்ஸ்’ (The Voyageurs) என்ற கனடிய ஆதரவாளர் குழுவினர் நாடு முழுவதும் பல நகரங்களில் போட்டியை நேரலையாகப் பார்ப்பதற்கான (Watch parties) ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
எனினும், இந்தப் போட்டி கனடாவில் உள்ள உலகக் கிண்ண மைதானங்களில் நடத்தப்படாதது குறித்து சில ரசிகர்கள் இணையத்தில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
றொரண்டோ (Toronto) மற்றும் வான்கூவர் (Vancouver) ஆகிய நகரங்களில் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், அங்குள்ள பிபா ரசிகர் திருவிழாக்கள் (FIFA Fan Festival) தொடர்ந்து ஒளிபரப்பப்படவுள்ளன.
இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி, ஜூலை 9 அன்று பாஸ்டன் (Boston) நகரில் நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் பராகுவே (Paraguay) அல்லது பிரான்ஸ் (France) அணியை எதிர்கொள்ளும்.










