கனடாவில் புதியவர்களுக்கு நேரும் அவலம் – 87 சதவீதமானோர் பாகுபாட்டை எதிர்கொள்வதாக அதிர்ச்சித் தகவல்!

பல்லின கலாச்சாரத்தின் அடையாளமாகக் கருதப்படும் கனடாவில், சமீபத்திய ஆண்டுகளில் குடியேறிய புதியவர்களில் 10-ல் 9 பேர் ஏதோ ஒரு வகையில் பாகுபாட்டை எதிர்கொள்வதாக WPP Canada நடத்திய புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

இனம் (Race), மொழி அல்லது உச்சரிப்பு (Language/Accent) மற்றும் அவர்களின் கல்வி அல்லது வேலை அனுபவம் அங்கீகரிக்கப்படாமை போன்றவை பாகுபாட்டிற்கான முக்கிய காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.

சுமார் 31 சதவீதமானோர் நேரடியாகத் தமது மொழி மற்றும் உச்சரிப்பு காரணமாகப் புறக்கணிக்கப்படுகின்றனர்.

எனினும், மறைமுகமாக 80 சதவீதச் சம்பவங்களில் இதுவே அடிப்படைத் தூண்டுகோலாக உள்ளது.

16 சதவீதமானோர் “கனடாவில் பிறந்தால் மட்டுமே இங்கு முழுமையான அங்கீகாரம் கிடைக்கும்” என நம்புகின்றனர்.

இதனால் புதியவர்களில் கால் பகுதியினர் மற்றவர்களுடன் பழகுவதைத் தவிர்த்து, தமது சமூகங்களுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த கசப்பான அனுபவங்களால், புதியவர்களில் 29 சதவீதமானோர் மட்டுமே கனடாவில் நிரந்தரமாகத் தங்கி வாழ விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

கனடா என்பது வரலாறு அல்லது சின்னங்களைப் பற்றியது மட்டுமல்ல, அது கருணை மற்றும் சமத்துவம் போன்ற விழுமியங்களைப் பற்றியது” என்று இந்த ஆய்வில் பங்கேற்ற பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Articles

Latest Articles