கனடாவின் புதிய எல்லைச் சட்டத்தால் LGBTQ+ அகதிகளுக்கு ஆபத்து – மனித உரிமை அமைப்பு கவலை!

கனடா (Canada) அரசாங்கம் கொண்டுவந்துள்ள புதிய எல்லைச் சட்டம் (C-12), அங்குள்ள LGBTQ+ அகதிகளைப் பெரும் ஆபத்தில் தள்ளியுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

கனடாவிற்குள் நுழைந்து ஓராண்டுக்குள் அகதி அந்தஸ்து கோர வேண்டும் என்ற புதிய விதிமுறையே இதற்குக் காரணமாகும்.

இதன் மூலம், சுமார் 30,000 அகதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தங்களது சொந்த நாடுகளில் மரண தண்டனை அல்லது சிறைத்தண்டனையை எதிர்கொள்ளும் சூழலிலும், பலர் பயம் மற்றும் தயக்கம் காரணமாக ஓராண்டுக்கு பின்னரே அகதி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கின்றனர்.

தற்போது இந்த புதிய சட்டத்தினால், தங்களை கனடா அரசு வலுக்கட்டாயமாக சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பிவிடுமோ என்ற அச்சத்தில் அகதிகள் வாழ்கின்றனர்.

இந்த சட்டத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்து தற்போது கனடா நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

 

 

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles