அமெரிக்கா கனடியப் பொருட்கள் மீது விதித்துள்ள அனைத்து வரிகளையும் (Tariffs) நீக்கினால் மட்டுமே, அமெரிக்க மதுபானங்கள் மீதான தடையை மேனிடோபா (Manitoba) மாகாணம் விலக்கும் என அதன் முதல்வர் வாப் கினியூ (Wab Kinew) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 2025 முதல் மேனிடோபாவில் அமெரிக்க மதுபானங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.
பேச்சுவார்த்தையில் ஒரு பலமான கார்டாக இதைப் பயன்படுத்துவதாக முதல்வர் கினியூ (Kinew) குறிப்பிட்டுள்ளார்.
வரிகளை நீக்குவதுடன், சர்ச்சைக்குரிய ஜாக் எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான அனைத்து இரகசியக் கோப்புகளையும் அமெரிக்க அரசு வெளியிட வேண்டும் என்றும் அவர் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் எப்ஸ்டீன் இடையிலான தொடர்புகளைக் கனடியப் பேச்சுவார்த்தையாளர்கள் சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
2030-ஆம் ஆண்டிற்குள் சர்ச்சில் துறைமுகம் வழியாக திரவ இயற்கை எரிவாயுவை (LNG) ஏற்றுமதி செய்ய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் இது வடபகுதி மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை இத்தகைய பாரிய திட்டங்கள் குறைக்கும் என மேனிடோபா முதல்வர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.










