உலகின் மிகப்பெரிய புலம்பெயர் தமிழ் சமூகம் கனடாவில் இருப்பதில் பெருமிதம் -பிரதமர் மார்க் கார்னி அறிக்கை!

கனடாவிலும் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து ‘தமிழ் இனப்படுகொலை நினைவு நாளை’ (Tamil Genocide Remembrance Day) அனுஷ்டிப்பதாகக் கனடிய அரசு உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் தங்களின் உயிர்களை இழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றுவதுடன், இந்தத் துயரங்களைச் சுமந்து வாழும் குடும்பங்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்களுடன் கனடா என்றும் துணை நிற்கிறது.

வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள புகலிடம் தேடி வந்த பெருமளவிலான தமிழ் மக்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய புலம்பெயர் தமிழ் சமூகங்களில் ஒன்றாகக் கனடா (Canada) விளங்குவதை அறிக்கை பெருமையுடன் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில், கனடிய நாடாளுமன்றம் மே 18 ஆம் திகதியை ‘தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக’ ஒருமனதாக அங்கீகரித்தது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரங்களை ‘இனப்படுகொலை’ (Genocide) என ஏற்றுக்கொண்டமை, இந்த வேதனையான வரலாற்றை அங்கீகரிப்பதற்கான மிக முக்கியமான படியாகும்.

இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், நீதியைப் நிலைநாட்டுவதற்கும், நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கும் எடுக்கப்படும் சர்வதேச முயற்சிகளுக்குக் கனடா  ஆதரவு தொடரும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனித கண்ணியம் மற்றும் நீதிக்கான தங்களின் அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்துவதுடன், இத்தகைய கடுமையான மனித உரிமை மீறல்கள் ஒருபோதும் புறக்கணிக்கப்படவோ அல்லது மறக்கப்படவோ கூடாது என கனடிய அரசு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles